தென்காசியில் தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2022-01-26 21:00 GMT
தென்காசி:
திருவண்ணாமலை மாவட்டம் வீரளூரில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தை கண்டித்தும், நீண்ட நாட்களாக சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தென்காசி புதிய பஸ் நிலையம் அருகே தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் சந்திரசேகர், குற்றாலம் குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாததால் தென்காசி போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 19 பேரை கைது செய்தனர். பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்