திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 726 பேர் பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 726 பேர் பாதிக்கப்பட்டனர்.

Update: 2022-01-27 14:38 GMT
திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 1 லட்சத்து 40 ஆயிரத்து 268 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 290 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 7 ஆயிரத்து 77 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் 1,901 பேர் இறந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் நேற்று கொரோனா தொற்றால் 2 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்