காரைக்குடி,
தேவகோட்டை அருகே வெளிமுத்தி கிராமத்தை சேர்ந்த பாண்டி மனைவி சுதா (வயது29). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 5-ந்தேதி இரவு வீட்டில் மண்எண் ணெய்யை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தேவகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.