நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 728 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 62,741 ஆக அதிகரிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மேலும் 728 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 62,741 ஆக அதிகரித்து உள்ளது.

Update: 2022-01-27 18:18 GMT
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மேலும் 728 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 62,741 ஆக அதிகரித்து உள்ளது.
728 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 62 ஆயிரத்து 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 5 பேரின் பெயர் பிற மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 62,013 ஆக குறைந்தது.
இதற்கிடையே நேற்று மேலும் 728 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. எனவே இதுவரை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்து 741 ஆக அதிகரித்து உள்ளது.
4,589 பேருக்கு சிகிச்சை
இந்த நிலையில் நேற்று இம்மாவட்டத்தில் 391 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 57 ஆயிரத்து 628 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 524 பேர் உயிரிழந்த நிலையில் 4,589 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்த நிலையிலேயே இருப்பதால், பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்