கறம்பக்குடி அருகே ஆக்கிரமிப்பு கட்டிடம் அகற்றம்

கறம்பக்குடி அருகே ஆக்கிரமிப்பு கட்டிடம் அகற்றப்பட்டது.

Update: 2022-01-27 18:23 GMT
கறம்பக்குடி:
கறம்பக்குடி அருகே உள்ள கூகை புழையான் கொல்லை கிராமத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் தனிநபர் ஒருவர் கட்டிடம் கட்டி சிமெண்டு கல் அமைக்கும் தொழில் செய்து வந்தார். இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து கறம்பக்குடி தாசில்தார் விஸ்வநாதன் தலைமையில் வருவாய்த்துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் அங்கு சென்று பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடத்தை இடித்து அகற்றினர்.

மேலும் செய்திகள்