மேலும் 63 பேருக்கு கொரோனா
பெரம்பலூரில் 63 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 63 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு்ள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,980 ஆக உயர்ந்துள்ளது. அதில் ஏற்கனவே 248 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மாவட்டத்தில் மொத்தம் 13,014 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவிற்கு தற்போது 718 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 306 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.