பெங்களூருவில் மேலும் 185 பேருக்கு ஒமைக்ரான்
பெங்களூருவில் மேலும் 185 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் கொரோனா பரவலுடன் ஒமைக்ரான் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் நேற்று முன்தினம் வரை 930 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் பெங்களூருவில் புதிதாக 185 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,115 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.