வியாபாரியிடம் பணம் பறித்த வாலிபர் கைது
வியாபாரியிடம் பணம் பறித்த வாலிபர் கைது
நெல்லை:
நெல்லை டவுன் வயல்தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மகன் புவனேஷ் (வயது 21). இவர் கடந்த 2021-ம் ஆண்டு நெல்லை டவுனில் உள்ள ஒரு வியாபாரி கடையை அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது அவரிடமிருந்து ரூ.1300-ஐ பறித்து விட்டு சென்று விட்டார். இதுகுறித்து நெல்லை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ஒரு வருடமாக தலைமறைவாக இருந்த புவனேசை நேற்று கைது செய்தார்.