உரிய ஆவணமின்றி கொண்டுசென்ற ரூ.2 லட்சத்து 8 ஆயிரம் பறிமுதல்

உரிய ஆவணமின்றி கொண்டுசென்ற ரூ.2 லட்சத்து 8 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-01-28 15:01 GMT
மானாமதுரை, 
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதையடுத்து மானாமதுரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று மாலை 4.30 மணிக்கு மதுரை - ராமேசு வரம் 4 வழிச்சாலையில் மானாமதுரை வழிவிடு முருகன் கோவில் அருகே பறக்கும் படை தாசில்தார் மகா தேவன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அருள்ராஜ் தலைமையிலான போலீசார் சோதனை செய்து கொண்டு இருந்தபோது ராம நாதபுரத்தில் இருந்து காரில் மதுரை சென்று கொண்டு இருந்த ஆர்.எஸ்.மங்கலத்தை சேர்ந்த ரகமத்துல்லா மகன் குல்ஹக் என்பவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.2 லட்சத்து 8 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்து மானாமதுரை கருவூலத்தில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்