லாரி-கார் மோதல்; முதியவர் பலி

திருமங்கலம் அருகே லாரி- கார் மோதலில் முதியவர் பலியானார். இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-01-28 20:05 GMT
திருமங்கலம்,

நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் பகுதியை சேர்ந்தவர் சுனில் தாசன் (வயது 63). இவர் தனது நண்பர்கள் சிலருடன் நெல்லையில் இருந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு செல்ல காரில் வந்து ெகாண்டிருந்தார். காரை டிரைவர் பாலமுருகன் ஓட்டினார்.
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள சிவரக்கோட்டையில் ஒரு தனியார் நிறுவனம் அருகே நேற்று அதிகாலை 3 மணி அளவில் கார் வந்த போது, முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் காரின் முன் பகுதியில் அமர்ந்திருந்த சுனில் தாசன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். டிரைவர் பாலமுருகன், சுனில்தாசனின் நண்பர் அமல்ராஜ் உள்ளிட்ட 4 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதிகாலையில் நடந்த இந்த விபத்தினால் விருதுநகர்-திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த கள்ளிக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த சுனில்தாசன் உடலை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். 


மேலும் செய்திகள்