தேனி அருகே ஆம்புலன்ஸ் மோதி முதியவர் பலி

தேனி அருகே ஆம்புலன்ஸ் மோதி முதியவர் பலியானார்.

Update: 2022-01-29 15:26 GMT
தேனி:
சின்னமனூர் அருகே உள்ள குச்சனூரை சேர்ந்தவர் பீமராஜ் (வயது 74). இவர் தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் உள்ள தனது உறவினர் நடத்தி வரும் வாகன பராமரிப்பு நிலையத்திற்கு நேற்று சென்றார். அப்போது அங்குள்ள தேனி-கம்பம் சாலையில் ஒரு தனியார் திருமண மண்டபம் அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். 
அப்போது அந்த வழியாக வந்த தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று பீமராஜ் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 
இந்த விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்