கஞ்சா கடத்திய 2 பேர் கைது

கஞ்சா கடத்திய 2 பேரை கைது செய்தனர்

Update: 2022-01-29 20:36 GMT
நெல்லை:
பாளையங்கோட்டை பெருமாள்புரம் போலீசார் வி.எம்.சத்திரம் சீனிவாச நகரில் வாகன சோதனை நடத்தினர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் மேலப்பாட்டத்தை சேர்ந்த இசக்கிமுத்து (வயது 28) மற்றும் பெருமாள்புரத்தை சேர்ந்த கருப்பசாமி என்ற கண்ணன் (27) என்பது தெரியவந்தது. அவர்கள் மோட்டார் சைக்கிளில் ஒரு பாக்கெட்டில் 900 கிராம் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், 2 பேரையும் கைது செய்தனர். கஞ்சா, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்