நெல்லை மாவட்டத்தில் மது போதையில் வாகனம் ஓட்டிய 27 பேர் மீது வழக்கு
மது போதையில் வாகனம் ஓட்டிய 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் ஏற்படும் சாலை விபத்துகளினால் உயிரிழப்பை தடுக்கும் வகையில் மதுபோதையில் வாகனம் ஓட்டி வரும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கும்படி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இதன்படி கடந்த 25-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார் இதுவரை, மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்த 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 26 இருசக்கர வாகனங்கள், ஒரு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் நேற்று முககவசம் அணியாமல் இருந்ததாக 131 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.