மோட்டார் சைக்கிள் திருட்டு

மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

Update: 2022-01-30 21:00 GMT
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பூலாம்பாடியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது 50). இவர் தனது வீட்டின் முன்பு நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். நேற்று காலையில் எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சுந்தர்ராஜன் அரும்பாவூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்