சென்னிமலை அருகே லாரி கவிழ்ந்து விபத்து

சென்னிமலை அருகே லாரி கவிழ்ந்தது. டிரைவர்- கிளீனர் காயமின்றி உயிர் தப்பினர்.

Update: 2022-01-31 17:34 GMT
நாமக்கல்லில் இருந்து துணி பண்டல்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று காலையில் சென்னிமலை வழியாக திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நோக்கி சென்று கொண்டிருந்தது. சென்னிமலையை அடுத்த கணுவாய் அருகே சென்றபோது அங்குள்ள வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி ரோட்டோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் மற்றும் அதில் வந்த கிளீனர் ஆகியோர் காயமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

மேலும் செய்திகள்