திருமணமான ஒரு மாதத்தில் புது மாப்பிள்ளை திடீர் சாவு போலீஸ் விசாரணை

திருமணமான ஒரு மாதத்தில் புது மாப்பிள்ளை திடீர் சாவு போலீஸ் விசாரணை

Update: 2022-02-14 16:47 GMT

கச்சிராயப்பாளையம்

கச்சிராயப்பாளையம் அருகே உள்ள காரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லமுத்து மகன் பெரியசாமி(வயது 22). இவரும் நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சு(19) என்பவரும் காதலித்து கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.  இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் கணவன், மனைவி இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பெரியசாமிக்கு திடீரென விக்கல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பெரியசாமி பரிதாபமாக இறந்தார். அவரது சாவுக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.இது குறித்து கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான ஒரே மாதத்தில் புது மாப்பிள்ளை இறந்த சம்பவத்தால் காரனூர் கிராமமக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மேலும் செய்திகள்