திருச்சியில் இருந்து மலேசியாவுக்கு மீண்டும் விமான சேவை

திருச்சியில் இருந்து மலேசியாவுக்கு மீண்டும் விமான சேவை

Update: 2022-03-08 19:47 GMT
செம்பட்டு,மார்ச்.9-
திருச்சியில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை போன்ற நாடுகளுக்கு சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மலிந்தோ விமானம் வாரத்திற்கு ஒரு நாள் என்ற முறையில் திருச்சியிலிருந்து மலேசியாவிற்கு சேவையை வழங்க உள்ளது. இந்த விமானம் வருகிற 11, 18, 25-ந் தேதிகளில் மலேசியாவில் இருந்து இரவு 10.35 மணிக்கு திருச்சிக்கு வந்து மீண்டும் திருச்சியில் இருந்து மலேசியாவிற்கு 11.25 மணிக்கு புறப்பட்டு செல்லும். விரைவில் இதன் சேவை அதிகரிக்க உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்