திருமணமான 9 மாதத்தில் மின்சாரம் தாக்கி பெண் பலி

திருமணமான 9 மாதத்தில் மின்சாரம் தாக்கி பெண் பலியானார்.

Update: 2022-03-11 16:08 GMT
ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு குட்டைக்கார தெருவைச் சேர்ந்தவர் மோகன்ராஜ், கடலூரில் உள்ள இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பேபி ஷாலினி (வயது 20). இவர்களுக்கு திருமணமாகி 9 மாதங்களே ஆகிறது. பேபி ஷாலினி மேல்விஷாரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். 

பேபி ஷாலினி தனது வீட்டில் தண்ணீர் பக்கெட்டில் தண்ணீர் நிரப்பி, ஹீட்டர் முலம் வெந்நீர் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பேபி ஷாலினி மீது மின்சாரம் தாக்கியது. 

ஆபத்தான நிலையில் இருந்த அவரை ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்தபோது அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேபிஷாலினிக்கு திருமணமாகி 9 மாதங்களே ஆவதால் ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்