வரத்து குறைவால் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு

வரத்து குறைவால் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. காக்கட்டான் கிலோ ரூ.1,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Update: 2022-03-11 18:28 GMT
நொய்யல், 
பூ விவசாயிகள்
நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான குந்தாணிபாளையம், குளத்துப்பாளையம், நடையனூர், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில், கொங்குநகர், மூலிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பூக்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
இங்கு விளையும் பூக்களை கூலி தொழிலாளர்கள் மூலம் பறித்து லேசான கோணிப்பைகளில் போட்டு உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
விலை உயர்வு
இந்தநிலையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.700-க்கும், சம்பங்கி  ரூ.120-க்கும், அரளி ரூ.100-க்கும், ரோஜா ரூ.120-க்கும், முல்லை ரூ.700-க்கும், செவ்வந்தி ரூ.80-க்கும், காக்கட்டான் ரூ.750-க்கும் ஏலம் போனது.
நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.1,000-க்கும், சம்பங்கி ரூ.220-க்கும், அரளி ரூ.200-க்கும், ரோஜா ரூ.200-க்கும், முல்லை ரூ.1,000-க்கும், செவ்வந்தி ரூ.200-க்கும் காக்கட்டான் ரூ.1,200-க்கும் ஏலம் போனது. வரத்து குறைவால் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்