பிரதோஷ வழிபாடு

பிரதோஷ வழிபாடு நடந்தது

Update: 2022-03-15 18:26 GMT
எஸ்.புதூர், 
எஸ்.புதூர் அருகே கரிசல்பட்டியில் உள்ள பழமையான கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் நந்தீஸ்வரர் மற்றும் கைலாசநாதருக்கு 11 வகையான சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. இதேபோல் உலகம்பட்டியில் உள்ள உலகநாயகி சமேத உலகநாத சாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து உலகநாயகி சமேத உலகநாத சாமிகள் ரிஷப வாகனத்தில் உள்மண்டப பிரகாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்