கட்டிட தொழிலாளி திடீர் சாவு

நெல்லை மேலப்பாளையத்தில் கட்டிட தொழிலாளி திடீரென இறந்தார்.

Update: 2022-03-20 19:05 GMT
நெல்லை:
நெல்லை மேலப்பாளையம் அருகே உள்ள கருங்குளம் தந்தை பெரியார் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி மகன் ஸ்டீபன் (வயது 28). கட்டிட தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் மாலை அந்த பகுதியில் உள்ள கால்வாயில் மீன்பிடிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது ஸ்டீபன் எதிர்பாராதவிதமாக கால்வாயில் தவறி விழுந்தார். 
உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து வீட்டிற்கு கொண்டு சென்றனர். பின்னர் இரவு ஸ்டீபனுக்கு திடீரென லேசாக மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது. உடனே உறவினர்கள் அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்டீபன் பரிதாபமாக உயிரிழந்தார். 
இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்