இயற்கை வேளாண்மை பயிற்சி முகாம்

இயற்கை வேளாண்மை பயிற்சி முகாம் நடந்தது.

Update: 2022-03-23 18:06 GMT
இளையான்குடி, 
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் தடியமங்கலம், கோட்டையூர் ஆகிய கிராம பகுதியில் இயற்கை வேளாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது. கீஸ்டோன் பவுண்டேஷன் நிறுவனத்தின் ஆலோசகர் ராபர்ட் லியோ விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை பற்றிய சான்றிதழ் பயிற்சி அளித்தனர். உதவி திட்ட அலுவலர் குபேந்திரன் இயற்கை வேளாண்மை மூலம் கிடைக்கும் பயன்கள் பற்றி எடுத்துரைத்தார். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க இளையான்குடி வட்டார இயக்க மேலாளர் சுந்தரமூர்த்தி இயற்கை வேளாண்மை செய்யும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் குறித்து விளக்கம் அளித்தார். ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப் பாளர் விமலாதேவி, முருகேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர். 30-க்கும் மேற்பட்ட மகளிர் விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

மேலும் செய்திகள்