பயிற்சி முகாம்

ஊராட்சி, பேரூராட்சி பிரதிநிதிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

Update: 2022-03-24 18:43 GMT
சிங்கம்புணரி, 
 சிங்கம்புணரி தனியார் மண்டபத்தில் மக்கள் நலன் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பாக மக்கள் பிரதிநிதிகளான ஊராட்சி மன்ற தலைவர்கள் பேரூராட்சி மன்றத் தலைவர் துணைத்தலைவர் உறுப்பினர் களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலை வர்கள், நகர் பேரூராட்சி தலைவர் வார்டு கவுன் சிலர்கள் ஆகியோருக்கு குழந்தைகள் நல மையம் செயல் பாடுகள் குறித்து பயிற்சி நடத்தப்பட்டது. பேரூராட்சித் தலைவர் அம்பலமுத்து, துணைத்தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமண ராஜு கலந்து கொண்டார். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அமுதா வரவேற்றார். ஊராட்சி தலைவர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்