வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
பாவூர்சத்திரம் அருகே வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே உள்ள சாலைப்புதூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பாக்கியநாதன் மகன் முப்புடாதி முத்து (வயது 37). இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட முப்புடாதி முத்து நேற்று முன்தினம் இரவு வீட்டில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.