கோவிலில் உண்டியல் எண்ணிக்கை

திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை

Update: 2022-03-29 19:02 GMT
தொண்டி
திருவாடானை தாலுகா திருவெற்றியூரில் பாகம்பிரியாள் சமேத வல்மீகநாதசுவாமி கோவில் உள்ளது. இங்கு  நேற்று உண்டியல் எண்ணும் பணி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவலிங்கம் முன்னிலையில் நடைபெற்றது. இதில் 9 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. இதில் ரூ. 23 லட்சத்து 92 ஆயிரத்து 914 ரொக்கமும், 174.500 கிராம் தங்கம், 664 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். உண்டியல் எண்ணும் பணியில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, அறநிலையத்துறை ஆய்வாளர் சண்முகசுந்தரம், சரக கண்காணிப்பாளர் செந்தில்குமார், கவுரவ கண்காணிப்பாளர் சுந்தரராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்