விஷம் குடித்து முதியவர் தற்கொலை

கொரடாச்சேரி அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-03-29 19:29 GMT
கொரடாச்சேரி:
கொரடாச்சேரி போலீஸ் சரகம் கரையாபாலையூர் கிராமத்தை சேர்ந்தவர் உத்தண்டி (வயது 70). விவசாய தொழிலாளியான இவருக்கு மூட்டுவலி மற்றும் வயிற்றுவலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். வலி குணமாகாததால் மனவேதனையில் இருந்த உத்தண்டி, வீட்டில் யாரும் இல்லாதபோது வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்து வி்ட்டார். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த உத்தாண்டியை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உத்தண்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக உத்தண்டியின் மகன் செல்வகுமார் கொடுத்த புகாரின்பேரில் கொரடாச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்