நார்த்தம்பட்டியில் பத்திரகாளியம்மன் கோவில் தேரோட்டம் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

நார்த்தம்பட்டியில் பத்திரகாளியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2022-04-02 16:32 GMT
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அடுத்த நார்த்தம்பட்டி கிராமத்தில் பத்திரகாளியம்மன் கோவில் பங்குனி மாத தேர்த்திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டிஅம்மனுக்கு கங்கை பூஜை மற்றும் கும்ப பூஜை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்