திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு 15-ந் தேதி முதல் விமான சேவை

திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு 15-ந் தேதி முதல் விமான சேவை தொடக்கம்

Update: 2022-04-06 19:54 GMT
செம்பட்டு,ஏப்.7-
திருச்சியில் இருந்து  கோலாலம்பூருக்கு ஏற்கனவே ஸ்கூட் ஏர் ஏசியா, ஏர் இந்தியா எகஸ்பிரஸ் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வருகிற 15-ந் தேதி முதல் இண்டிகோ நிறுவனம் தனது சேவையை கோலாலம்பூருக்கு தொடங்க உள்ளது. இந்த விமானமானது மதியம் 2.05 மணிக்கு திருச்சிக்கு வந்து மீண்டும் திருச்சியில் இருந்து 3.05 மணிக்கு கோலாலம்பூர் நோக்கி புறப்பட்டுச் செல்லும். இந்த விமானம் தினமும் இயக்கப்படுகிறது என இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்