விஷம் குடித்து முதியவர் தற்கொலை

மனைவி இறந்ததால் மனஉளைச்சலில் விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-04-10 16:20 GMT
நன்னிலம்:
பேரளம் அருகே குருங்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 85). இவருடைய மனைவி சாந்தா. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வயது முதிர்வு காரணமாக சாந்தா உயிரிழந்தார். மனைவி இறந்ததால் மனஉளைச்சலில் இருந்து வந்த ஆறுமுகம் சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து விட்டு மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு  சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்