மின்சாரம் பாய்ந்து பெண் பலி

பெரியகுளம் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் பலியானார்.

Update: 2022-04-12 14:01 GMT
பெரியகுளம்:

பெரியகுளம் அருகே உள்ள நேரு நகரை சேர்ந்தவர் காமராஜ். அவருடைய மனைவி பொன்னுத்தாய் (வயது 55). இவர், காந்திநகர் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் இலவம் காய்களை சேகரித்து கொண்டிருந்தார். 

அப்போது அறுந்து கிடந்த மின்கம்பியை அவர் தெரியாமல் தொட்டு விட்டார். இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பொன்னுத்தாய் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்