மகாமாரியம்மன் கோவிலுக்கு பால்குட ஊர்வலம்

மகாமாரியம்மன் கோவிலுக்கு பால்குட ஊர்வலம்

Update: 2022-04-15 19:21 GMT
தா.பேட்டை, ஏப்.16-
தா.பேட்டை அருகே சேருகுடி கிராமத்தில் மகா மாரியம்மன் கோவிலில் சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு திரளான பக்தர்கள் பால்குடம் சுமந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் மகாமாரியம்மன் பக்தர்களுக்கு அருளினார். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்