திருக்கோவிலூரில் மணல் கடத்தலை தடுக்க தென்பெண்ணை ஆற்றின் கரையோரங்களில் பள்ளம் போலீசார் நடவடிக்கை

திருக்கோவிலூரில் மணல் கடத்தலை தடுக்க தென்பெண்ணை ஆற்றின் கரையோரங்களில் பள்ளம் போலீசார் நடவடிக்கை

Update: 2022-04-16 16:33 GMT

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் மணல் கொள்ளை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் விரைந்து வந்து தென்பெண்ணை ஆற்றில் எந்தெந்த பகுதிகளில் இருந்து மணல் கடத்தப்படுகிறது என்பதை ஆய்வுசெய்தார். பின்னர் மணல் கடத்தப்படும் பகுதியில் உள்ள ஆற்றின்கரையோரம் தனது சொந்த செலவில் பொக்லைன் எந்திரம் மூலம் பெரியஅளவில் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் மணல் கடத்துவதற்காக பொக்லைன் எந்திரம், லாரிகள், மாட்டு வண்டிகள் ஆற்றுக்குள் செல்வது தடுக்கப்படும். மேலும் மணல் கடத்தல் நடைபெறுவது தெரியவந்தால் உடனடியாக தகவல் தரும்படியும், அவர்களின் பெயர் ரகசியமாக காக்கப்படுவதோடு, உரிய சன்மானமும் வழங்கப்படும் என கிராம மக்களுக்கு அறிவுரை வழங்கி இருப்பதாக சப்-இன்ஸ்பெக்டா் சிவச்சந்திரன் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்