மாணவியை கடத்திய ஆட்டோ டிரைவர் கைது

மாணவியை கடத்திய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டாா்.

Update: 2022-04-18 17:11 GMT

சங்கராபுரம், 

சங்கராபுரம் அருகே உள்ள் ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர்  சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவியை காணவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வந்தார். 


அதில், மாணவியை சங்கராபுரம் ஆற்றுப் பாதைதெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவரான முத்துக்குமரன் மகன் முனீஸ்வரன் (வயது 22) என்பவர் சென்னைக்கு கடத்தி சென்று இருப்பது தெரியவந்தது. இதயைடுத்து, போலீசார் விரைந்து சென்று முனீஸ்வரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, மாணவியை மீட்டனர். 

மேலும் செய்திகள்