வேகமாக நிரம்பும் வெம்பக்கோட்டை அணை

நீர்வரத்து காரணமாக வெம்பக்கோட்டை அணை வேகமாக நிரம்பி வருகிறது.

Update: 2022-04-19 19:41 GMT
தாயில்பட்டி, 
சிவகாசிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் வெம்பக்கோட்டை அணையின் உயரம் 24 அடி ஆகும். நேற்று முன்தினம் வரை அணையில் 15 அடி உயரம் நீர்மட்டம் இருந்தது. தொடர்ந்து நீர்வரத்து காரணமாக நீர்மட்டம் உயர்ந்து தற்போது 17 அடியாக உள்ளது. மேலும் 3 அடி உயரும் பொழுது அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும். 4 ஆண்டுகளுக்கு பிறகு கோடைகாலத்தில் தற்போது தான் நீர்மட்டம் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். மழைக் காலத்தில் பெய்த தொடர் மழை காரணமாக கடந்த 3 மாதத்திற்கு முன்பு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதற்குபிறகு நீர்வரத்து இல்லாத காரணத்தினால் அணை திறக்கப்படவில்லை. மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் அணை நிரம்ப வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர். 

மேலும் செய்திகள்