விழிப்புணர்வு ஊர்வலம்

தீயணைப்பு துறையினர் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2022-04-19 20:04 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூரில் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை சார்பில் தீ தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. ஊர்வலத்தை துறைமங்கலத்தில் உள்ள தீயணைப்புத்துறை அலுவலக வளாகத்தில் இருந்து தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் அம்பிகா கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிலைய அலுவலர் உதயகுமார் முன்னிலை வகித்தார்.
இந்த ஊர்வலம் துறைமங்கலம், பாலக்கரை, வெங்கடேசபுரம், சங்குப்பேட்டை, பழைய பஸ் நிலையம் வழியாகச் சென்று மீண்டும் தீயணைப்புத்துறை அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது. இதில் தீ விபத்தின்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு, மீட்பு நடவடிக்கைகள், வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் தீ விபத்து ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்க தேவையான வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தினர் பொதுமக்களுக்கு வினியோகம் செய்தனர்.

மேலும் செய்திகள்