அகழாய்வில் கிடைத்த விளையாட்டு பொருட்கள்
சிவகாசி அருகே அகழாய்வில் விளையாட்டு ெபாருட்கள் கிடைத்தன.
தாயில்பட்டி,
சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தப்பட்ட தாயக் கட்டைகள், கலைநயத்துடன் செய்யப்பட்ட சங்கு வளையல்கள், சுடுமண்ணால் செய்யப்பட்ட மண் குவளைகள், பாண்டி விளையாட்டுக்கு பயன்படுத்தபடும் சில்லு வட்டுகள் கிடைத்துள்ளதாக அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர், இணை இயக்குனர் பரத்குமார் ஆகியோர் தெரிவித்தனர்.