பிளஸ்-1 மாணவியை ஏமாற்றிய சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது

பிளஸ்-1 மாணவியை ஏமாற்றிய சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது

Update: 2022-04-22 18:53 GMT
மலைக்கோட்டை, ஏப்.23-
திருச்சி கோட்டை பகுதியை சேர்ந்த 17 வயது பிளஸ்-1 மாணவி கடந்த 18-ந் தேதி இரவு வீட்டில் இருந்து மாயமானார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை பல்வேறு இடங்களில் தேடிவந்தனர். இந்நிலையில் அவர் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு தங்கி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மதுரைக்கு சென்று இருவரையும் மீட்டனர். மேலும் அந்த சிறுவன் மாணவியை ஏமாற்றி ரூ.4 லட்சம் பெற்று செலவு செய்ததாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்து  கைதுசெய்தனர்.

மேலும் செய்திகள்