நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை

பெரம்பலூரில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-04-22 20:06 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் வெள்ளந்தாங்கி அம்மன் ஏரிக்கரை விவசாய சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் நேற்று கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பூவலிங்கத்தை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில், பெரம்பலூர் நகரில் நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால் பெரம்பலூர், விளாமுத்தூர், நொச்சியம், கோனேரிபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் அறுவடை செய்த நெல்லினை தொலைவில் குரும்பலூர் அல்லது கீழப்புலியூரில் உள்ள கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய வேண்டிய நிலை உள்ளது. அதுவும் தற்போது ஆன்லைன் மூலம் பதிவு செய்து 2 மாதத்திற்கு மேலாக நெல்லினை விற்க விவசாயிகள் காத்திருக்க வேண்டிய நிலையில் உள்ளனர். எனவே பெரம்பலூா் நகர் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்திட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

மேலும் செய்திகள்