பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பாளையங்கோட்டை அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
பாளையங்கோட்டை அருகே உள்ள மேலப்பாட்டம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மனைவி ராஜம்மாள் (வயது 34). இவருக்கு கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்து காணப்பட்ட ராஜம்மாள் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த பாளையங்கோட்டை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.