ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம்

ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2022-04-28 18:42 GMT
கரூர்
நொய்யல், 
புகழூர் மண்டலதுணை தாசில்தார் அன்பழகன் தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் அடங்கிய குழுவினர் புகழூர் அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம், புகழூர் காகித ஆலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர். மேலும் இதுபோன்று ஹெல்மெட் அணியாமல் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்