சங்கராபுரம் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி உதவிக்கு வந்தவருக்கு நிகழ்ந்த பரிதாபம்

சங்கராபுரம் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி உதவிக்கு வந்தவருக்கு நிகழ்ந்த பரிதாபம்

Update: 2022-04-30 16:58 GMT

சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம் மகன் கிருஷ்ணன்(வயது 61)தொழிலாளி. அதே ஊரைச் சேர்ந்தவர் வடிவேல். இவர் தனது மனைவி பூங்கொடிக்கு நாட்டு வைத்தியம் செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு சென்றார். இவர்களின் உதவிக்கு கிருஷ்ணனும் அவரது மோட்டார் சைக்கிளில் சென்றார். 

பின்னர் மறுநாள் காலையில் அவர்கள் அங்கிருந்து ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது களைப்பின் காரணமாக குறிப்பிட்ட தூரம் வந்ததும் வடிவேல் மனைவி பூங்கொடி கிருஷ்ணனுடைய மோட்டார் சைக்கிளில் அமர்ந்து வந்து கொண்டிருந்தார். இவர்களுக்கு பின்னால் வடிவேல் மோட்டார் சைக்கிளில் தனி ஆளாக வந்து கொண்டிருந்தார். 

சங்கராபுரம் அடுத்த சேமபாளையத்தில் வந்தபோது எதிர்பராதவிதமாக கிருஷ்ணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சாலையோர புளியமரத்தில் வேகமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி கிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். பூங்கொடி காயமின்றி உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்