மத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு

மத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் இறந்தார்.

Update: 2022-04-30 17:26 GMT
மத்தூர்:
மத்தூர் அருகே உள்ள கொடமாண்டப்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 74). இவர் கீழ் கந்தம்பட்டி அருகே மொபட்டில் சென்றார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள்,மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சீனிவாசன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்