ஓய்வு பெற்ற உடற்கல்வி இயக்குனரிடம் ரூ2½ லட்சம் பறிப்பு

ஸ்ரீரங்கத்தில் பட்டப்பகலில் ஓய்வு பெற்ற உடற்கல்வி இயக்குனரிடம் ரூ.2½ லட்சத்தை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

Update: 2022-05-02 19:49 GMT
ஸ்ரீரங்கம், மே.3-
ஸ்ரீரங்கத்தில் பட்டப்பகலில் ஓய்வு பெற்ற உடற்கல்வி இயக்குனரிடம் ரூ.2½ லட்சத்தை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
உடற்கல்வி இயக்குனர்
ஸ்ரீரங்கம் கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் நாச்சிமுத்து (வயது88). இவர் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒருபள்ளியில் உடற்கல்வி இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர் நேற்று காலை ரெங்க நகர் பகுதியிலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் ரூ.2½ லட்சம் பணம் எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில்  ஸ்ரீரங்கம் பழைய நிலையம்  பகுதியில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது, இவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் நாச்சிமுத்துவிடம்  இருந்த பணப்பையை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சல் போட்டார். ஆனால் அவர்கள் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வலைவீச்சு
 இதுகுறித்து நாச்சிமுத்து ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
இதேபோல் கடந்த மார்ச் மாதம் இதே வங்கியில் ஸ்ரீரங்கம் கீழவாசல் பகுதியை சேர்ந்த பிரியங்கா (46) என்பவர் நகையை அடகுவைத்து பெற்றுச் சென்ற ரூ.1 லட்சத்தை மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் பறித்து சென்றனர் என்பதுகுறிப்பிடத்தக்கது. தற்போது,2-வதுமுறையாகஇந்தசம்பவம்நடைபெற்றதால் வங்கி வாடிக்கையாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்