திருமணமான 4 நாட்களில் புதுப்பெண் மாயம்

திருமணமான 4 நாட்களில் புதுப்பெண் மாயமானார்.

Update: 2022-05-03 23:32 GMT
திருச்சி:

திருச்சி மாவட்டம் வளநாடு அருகே உள்ள கீழக்கோரைபட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி(வயது 39). தையல் தொழிலாளியான இவருக்கும், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா காக்காயமேடு பகுதியை சேர்ந்த ரேவதிக்கும்(19) கடந்த 29-ந் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் இருந்து ரேவதியை காணவில்லை என்று பழனிச்சாமி வளநாடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்