தர்மபுரி அருகே கிணற்றில் விவசாயி பிணம்

தர்மபுரி அருகே கிணற்றில் விவசாயி பிணமாக கிடந்தார்.

Update: 2022-05-04 18:03 GMT
தர்மபுரி:
தர்மபுரி அருகே கெங்கன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சின்னவன் (வயது 57). விவசாயியான இவருக்கு கண்பார்வை பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற சின்னவன் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியபோது அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் அவர் பிணமாக கிடந்தது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று அவருடைய உடலை மீட்டனர். இரவு நேரத்தில் கண் பார்வைக் குறைபாடு காரணமாக அவர் கிணற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மதிகோன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்