பிடாரியம்மன் கோவிலில் மது எடுப்பு திருவிழா

பிடாரியம்மன் கோவிலில் மது எடுப்பு திருவிழா நடைபெற்றது.

Update: 2022-05-04 18:18 GMT
கீரமங்கலம்:
கீரமங்கலம் அருகே குளமங்கலம் வில்லுனி ஆற்றங்கரையில் பிடாரியம்மன் கோவிலில் மது எடுப்பு திருவிழா இன்று நடந்தது. குளமங்கலம் கிராம பெண்கள் குடங்களில் தென்னம்பாளைகளை வைத்து அலங்காரம் செய்து வீட்டு வாசலில் பூஜை செய்த பிறகு தாரை தப்பட்டை முழங்க கும்மியாட்டம், வாண வேடிக்கைகளுடன் ஊர்வலமாக தூக்கிச் சென்று பிடாரியம்மன் கோவிலில் வைத்து வழிபட்டு சென்றனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

மேலும் செய்திகள்