போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.

Update: 2022-05-05 17:39 GMT
ராமநாதபுரம், 
திருவாடானை அருகே உள்ளது முள்ளிமுனை. இந்த ஊரை சேர்ந்த சமயலிங்கம் என்பவரின் மகள் சமயதேவி (வயது 21). காரங்காடு கிராமத்தைச் சேர்ந்த அலெக்ஸ் என்பவரின் மகன் கேட்வின் அக்விடேஸ் (22) என்பவரும் காதலித்து வந்தார்கள். இவர்கள் 2 பேரும் கடந்த 4-ந் தேதி வெளியூர் சென்று திருமணம் செய்து கொண்டார் களாம். இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் நேற்று ராமநாதபுரம் நகர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கோரி தஞ்சம் அடைந்தனர். போலீசார் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வாலிபைர உறவினருடன் அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்