ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பூலாம்பட்டி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
எடப்பாடி:
எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி பகுதியில் அரசு ஓடை புறம்போக்கு நிலத்தை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்து இருந்தார். இந்த நிலையில் நேற்று தாசில்தார் லெனின், மண்டல துணை தாசில்தார் மகேந்திரன், பூலாம்பட்டி வருவாய் ஆய்வாளர் வனஜா மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சுந்தரராஜன் ஆகியோர் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் கொண்டு ஆக்கிரமிப்பை அகற்றி நிலத்தை மீட்டனர்.