தனியார் நிதிநிறுவன ஊழியரிடம் ரூ.1 லட்சம்-3 பவுன் நகை பறிப்பு

தனியார் நிதிநிறுவன ஊழியரிடம் ரூ.1 லட்சம்-3 பவுன் நகை பறிப்பு

Update: 2022-05-07 20:08 GMT
மணப்பாறை, மே.8-
மணப்பாறையை அடுத்த கரும்புளிப்பட்டியைச் சேர்ந்தவர் மணிவேல் (வயது 27). இவர் மணப்பாறையில் உள்ள தனியார் நிதிநிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். பல இடங்களில் வசூலான ஒரு லட்சம் ரூபாயை வீட்டில் இருந்து எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் கரும்புளிப்பட்டி சுடுகாடு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து ஒரு லட்சம் ரொக்கம் மற்றும் 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து மணிவேல் மணப்பாறை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்