தர்மபுரியில் அனுமதியின்றி போராட்டம் நடத்திய 100 பேர் மீது வழக்கு

தர்மபுரியில் அனுமதியின்றி போராட்டம் நடத்திய 100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2022-05-08 00:11 GMT
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இந்தநிலையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக 100 பேர் மீது தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்